லீவு கேட்ட பெண் ஊழியரை படுக்கைக்கு அழைத்த அரசு அதிகாரி..!
கர்நாடகாவில் பெண் ஊழியர் ஒருவருக்கு அரசு அதிகாரி பாலியல் தொல்லை தருவதாக புகார் அளித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் கொப்பல் எஸ்பி அலுவலகத்தில் டி குரூப் ஊழியராக பணிபுரியும் விதவை பெண் ஒருவர்,
உதவி நிர்வாக அதிகாரி மல்லிநாத் (45) என்பவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில் எனக்கு அனுதாபத்தின் அடிப்படையில் வேலை கிடைத்தது. தினமும் எனக்கு மல்லிநாத் பாலியல் தொல்லை தருகிறார்.
விடுமுறை கேட்டால் உனக்கு கணவன் இல்லை உனக்கு விடுமுறை எதற்கு விடுமுறை..நான் உன் வீட்டுக்கு வரவா..? என்கிறார்.
விடுமுறை வேண்டும் என்றால் என்னுடன் லாட்ஜுக்கு வர வேண்டும் உனக்கு பணமும்,சுகமும் தருகிறேன் என்கிறார்.
மறுத்தால் சம்பளத்தில் கை வைக்கிறார்.
இது குறித்து கடந்த 2019-ல் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போதைய எஸ்பி உரிய நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது” என கூறினார்.