தனியாக இருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை ... வாட்டர் கேன் தொழிலாளி கைது
வாட்டர் கேன் போட சென்ற வீட்டில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொழிலாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள வள்ளலார் நகரைச் சேர்ந்த நவாஸ்கான் என்பவர் தனியார் குடிநீர் வாட்டர் கேன் நிறுவனத்தில் வாட்டர் கேன் சப்ளை செய்பவராக இருந்து வருகிறார். இவர் காரைக்கால் பகுதியில் அமைந்துள்ள ஒரு வீட்டில் வாட்டர் கேன் டெலிவரி செய்ய சென்றுள்ளார். அப்போது அந்த வீட்டில் இருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சொல்லப்படுகிறது.
இதுபற்றி தகவலறிந்த அச்சிறுமியின் பெற்றோர் நகர காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து புதுச்சேரியில் பதுங்கியிருந்த நவாஸ்கானை நகர காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுச்சேரி மத்திய சிறையில் அடைத்தனர்.