மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 3 ஆசிரியர்கள் கைது - பரபரப்பு சம்பவம்
2 வெவ்வேறு பள்ளிகளில் படிக்கும் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட புகாரில் 3 ஆசிரியர்கள் கைது செய்யபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிரியர் பிரபாகரன் கைது
கோவை மாவட்டம், குனியமுத்தூர் சுகுணாபுரத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் பிரபாகரன் என்பவர் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், இப்பள்ளியில் படிக்கும் 5 மாணவிகள் ஆசிரியர் பிரபாகரன் பாலியல் தொல்லை கொடுத்ததாக பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர்.
இதனால், ஆத்திரமடைந்த பெற்றோர்கள் கடந்த வெள்ளிக்கிழ்மை பள்ளி முன்பு திரண்டு, ஆசிரியர் பிராபாகரன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், முற்றுக்கையில் ஈடுபட்ட பெற்றோர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து, ஆசிரியர் பிரபாகரனை போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சியில் 2 ஆசிரியர்கள் கைது
இதேபோல், பொள்ளாச்சி அருகே உள்ள பள்ளியில் தாவரவியல் ஆசிரியராக உள்ள பாலசந்திரன், இயற்பியல் ஆசிரியராக பணிபுரியும் ராமகிருஷ்ணன் ஆகிய இருவரும், அப்பள்ளியில் படிக்கும் 17 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 1091 என்ற எண்ணிலும், அதன் பின் 181 என்ற எண்ணிலும் புகார் கொடுக்கப்பட்டது.
இதனையடுத்து, இவர்கள் இரண்டு பேரையும் நேற்று போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.