ரத்தம் சொட்ட, சொட்ட வாயில் துணியை அழுத்தி மாற்றுதிறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன் - அதிர்ச்சி சம்பவம்

Sexual harassment
By Nandhini Apr 28, 2022 05:32 AM GMT
Report

மேற்கு வங்க மாநிலம், ஜல்பைகுரியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண், தன்னுடைய பெற்றோர்களுடன் வசித்து வந்தனர்.

மாற்றுதிறனாளியான அப்பெண்ணை வீட்டில் தனியாக விட்டுவிட்டு, பெற்றோர்கள் தினமும் வேலைக்கு செல்வது வழக்கம். இதைப் அப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் நோட்டமிட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை அன்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து வீட்டில் தனியாக இருந்த மாற்றுதிறனாளி பெண் வீட்டிற்குள் அந்த நபர் நுழைந்தார்.

அப்போது, ஒரு துணியை எடுத்து அப்பெண் கத்தி கூச்சலிடாத வகையில் வாயில் துணியை வைத்து அழுத்தினார். பின்னர், அப்பெண்ணை ஒரு தூனில் கட்டினார். பிறகு அப்பெண்ணை கொடூரமாக தாக்கி, ரத்தம் சொட்ட, சொட்ட பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

வேலைக்கு சென்றுவிட்டு வந்த பெற்றோர் பெண் கிடந்த கோலத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து, உடனடியாக அங்குள்ள போலீசில் புகார் கொடுத்தனர்.

போலீசார் வழக்கு பதிவு செய்து முதற்கட்ட விசாரணை நடத்தினர். அப்போது, அந்த விசாரணையில் குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளியை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். 

ரத்தம் சொட்ட, சொட்ட வாயில் துணியை அழுத்தி மாற்றுதிறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன் - அதிர்ச்சி சம்பவம் | Sexual Abuse Girl