பஸ்ஸில் பெண்ணை துடிக்க, துடிக்க பாலியல் வன்கொடுமை செய்த கண்டக்டர், டிரைவர், கிளீனர் - அதிர்ச்சி சம்பவம்
மத்தியபிரதேச மாநிலம், தார் மாவட்டம் குக்ஷி நகரிலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை இரவு தனியார் பஸ் சென்றுக்கொண்டிருந்தனர்.
அந்த பஸ்ஸிசில் சில பயணிகள் பயணம் செய்தனர். அப்போது, பஸ்ஸில் பெண் ஒருவர் லாங்சாரி பகுதி தெரியாது. அந்தப் பகுதி வந்ததும் என்னை இறக்கி விடுமாறு கண்டக்டரிடம் கூறினார். ஆனால், லாங்சாரி பகுதி வந்தும், பஸ்ஸை நிறுத்தாமல் ஓட்டுநர் பஸ்ஸை ஓட்டிக் கொண்டிருந்தார்.
பஸ்ஸில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக இறங்கி விட்டு சென்றனர்.
அந்தப் பெண்ணை நோட்டமிட்ட டிரைவர், இருட்டான இடத்தில் ஒதுக்குப்புறமாக பஸ்ஸை நிறுத்தினார். அப்போது, அந்தப் பெண்ணை டிரைவர், கண்டக்டர், கிளீனர் நெருங்கி வந்தனர். பயந்து போன அப்பெண் செய்வது அறியாமல் திகைத்து நின்றாள்.
அந்தப் பெண்ணை 3 பேரும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்தனர். அப்பெண் கத்தி கூச்சலிட்டு கதறி அழுதாள். பஸ்ஸில் அப்பெண்ணை துடிக்க, துடிக்க பாலியல் பலாத்காரம் செய்து விட்டு, அந்த வழியிலேயே அந்தப் பெண்ணை போட்டுவிட்டு சென்றுவிட்டனர்.
இதனையடுத்து, அப்பெண் அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகார் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், பஸ் டிரைவரை கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள கண்டக்டர் மற்றும் கிளீனரை தீவிரமாக தேடி வருகின்றனர்.