மகளுக்கு பாலியல் துன்புறுத்தல் - ஆட்சியர் அலுவலகத்தில் தாய் தீக்குளிக்க முயற்சி - பரபரப்பு சம்பவம்

By Nandhini Apr 26, 2022 05:32 AM GMT
Report

விருதுநகர் மாவட்டம், சாத்தூர், இருக்கங்குடியைச் சேர்ந்தவர் தெய்வானை. இவருடைய 16 வயதில் மகள் உள்ளார். அதே பகுதியைச் சேர்ந்தவர் செந்தாமரை. இவர் அப்பகுதியில் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். இவருடைய மகன் சுலைமான். இவருக்கும் தெய்வானை மகளுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, சுலைமான், 16 வயது சிறுமிக்கு செல்போன் வாங்கி கொடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அந்த செல்போனில் தொடர்பு கொண்டு அப்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதை அறிந்த பெற்றோர் சிறுமியிடமிருந்த செல்போனை பறித்தனர். இதனையடுத்து, அந்த செல்போனை சுலைமானிடம் கொடுக்க செந்தாமரை வீட்டிற்கு சென்றனர். அப்போது, செந்தாமரை வீட்டாருக்கும், தெய்வானைக்கும் வாக்குவாதம் நடந்தது. இந்த வாக்குவாதத்தில் செந்தாமரை மற்றும் அந்த குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தெய்வானையை அடித்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, தெய்வானை, பாலியல் ரீதியாக தனது மகளை துன்புறுத்திய சுலைமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தேவயானையும், அவரது மகனும் வந்தனர். ஆனால், திடீரென இருவரும் ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.

அப்போது, தெய்வானைக்கு வலிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தெய்வானையை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவத்தால், மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

மகளுக்கு பாலியல் துன்புறுத்தல் - ஆட்சியர் அலுவலகத்தில் தாய் தீக்குளிக்க முயற்சி - பரபரப்பு சம்பவம் | Sexual Abuse 16 Year Old Girl