தமிழ் நடிகை வீட்டில் திருட்டு - இதையெல்லாமா திருடுவாங்க ? போலீஸ் தீவிர விசாரணை

Athulya Ravi Tamil Actress
By Karthikraja Jul 04, 2024 10:17 AM GMT
Report

தமிழ்நடிகை அதுல்யா ரவி வீட்டில் திருட்டு சம்பவம் நடைபெறவுள்ளது.

அதுல்யா ரவி

2017 ம் ஆண்டு காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகமானவர் அதுல்யா ரவி. அதை தொடர்ந்து ஏமாலி (2018), நாடோடிகள் 2 (2019) போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போதும் சில படங்களில் நடித்து வருகிறார்.

athulya ravi

இவர் தனது சொந்த ஊரான கோவையில் வடவள்ளி மருதம் சாலையில் உள்ள வீட்டில் , தனது தாயார் விஜயலட்சுமியுடன் வசித்து வருகிறார். சில நாட்களுக்கு முன் அவரது வீட்டில் ரூ.2 ஆயிரம் பணம் திருடு போய்விட்டது. இதனை தேடி பார்த்தபோது தான், பாஸ்போர்ட்டும் காணாமல் போயிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அதுல்யா ரவியின் தாய் விஜயலட்சுமி, வீடு முழுவதும் பாஸ்போர்ட் மற்றும் பணத்தை தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. 

வினோத திருட்டு - மனைவிக்கு உடம்பு சரியில்ல உருக்கமாக கடிதம் எழுதிய திருடன்

வினோத திருட்டு - மனைவிக்கு உடம்பு சரியில்ல உருக்கமாக கடிதம் எழுதிய திருடன்

விசாரணை

இதனால் , வடவள்ளி காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் புகாரளித்ததையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையை மேற்கொண்டனர். இவர்களது வீட்டில் வேலை பார்க்கும் தொண்டாமுத்தூர் அடுத்த குளத்துபாளையத்தை சேர்ந்த செல்வி (46) என்பவரிடம் சந்தேகத்தின் பேரில் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.

athulya ravi

தொடர்ந்து நடத்திய விசாரணையில், செல்வி தனது தோழியுடன் சேர்ந்து பணம் மற்றும் பாஸ்போர்ட்டை திருடியதை ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து திருட்டில் ஈடுபட்ட செல்வி மற்றும் அவரது தோழியான சுபாஷினி (40) ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர். பணத்தை பறிமுதல் செய்த காவல் துறையினர் பாஸ்போர்ட் எங்கு வைத்துள்ளார்கள் என தீவிரமாக விசாரித்து வருகின்றனர். வீட்டில் வேலைபார்க்கும் பெண்ணே திருட்டில் ஈடுபட்டது நடிகை அதுல்யா ரவிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.