“சீரியல்களில் நடிக்க வைப்பதாக ஆசை வார்த்தை காட்டி ஆசிரியையை மோசம் செய்த சீரியல் மேனேஜர்”
ஆசிரியையை சீரியலில் நடிக்க வைப்பதாக ஆசைவார்த்தை கூறி 4 முறை கர்ப்பமாக்கிய சீரியல் மேனேஜரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை பல்லாவரம் வெட்டர்லைன் பகுதியில் வசித்து வருபவர் கலைசெல்வி(30) இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர். இவரது வீட்டின் அருகே தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் சீரியல் படப்பிடிப்பு நடந்தது. அப்போது அத்தொடரின் மேலாளர் ரகு(53) என்பவர் கலைசெல்வியிடம் ஆசை வார்த்தை கூறி பேசியுள்ளார். சீரியலில் நடிக்க வைப்பதாக கூறியவர் தனது மனைவி இறந்துவிட்டதாக பொய்யான தகவலை தெரிவித்துள்ளார்.
ரகுவுடன் கலைச்செல்வி பேசிப்பழகி வந்துள்ளார். மனைவி இறந்துவிட்டதால் உன்னை திருமணம் செய்துக்கொள்கிறேன் எனக்கூறி பல இடங்களுக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்துள்ளார். இதன்காரணமாக ஆசிரியை 4 முறை கர்ப்பம் தரித்துள்ளார். ரகுவை கட்டாயத்தில் 4 முறை கருகலைப்பு செய்துள்ளார்.
இந்நிலையில் திருமணம் செய்துக்கொள்ளாமல் ஏமாற்றியுள்ளார். ஆசிரியரை மனநலம் பாதிக்கப்பட்டவர் என தவறான தகவலை பரப்பியும், நடத்தை சரியில்லாதவர் போல் சித்தரித்தும் போலீசாரிடம் கூறி வழக்குப்பதிவு செய்ய விடாமல் சரிகட்டி வந்துள்ளார். 8 மாதம் காலமாக அவர் மீது வழக்குபதிவு செய்ய செய்ய ஆசிரியை எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளது. காவல் நிலையத்தில் புகார் எடுக்கவில்லை.
இந்நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் தாம்பரம் அனைத்து மகளிர் போலீசார் 417, 376, 492, 323, 506(1), ஆகிய 5 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
முதல் தகவல் அறிக்கையில் பாலியல் வன்புணர்வு செய்து, ஏமாற்றியதாகவும், தாக்கி அவரது 2 சவரன் தங்க சங்கிலியை பறித்ததாகவும், சின்னத்திரை மேலாளர் ரகு மற்றும் அவரது உறவினரும் வருவாய்
ஆய்வாளராக பணிபுரியும் பிரபாகரன் என்பவர் மீதும் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள ரகு மற்றும் அவரது உறவினரையும் போலீசார் தேடி வருகின்றனர்.