பீரியட்ஸ்ன்னு கூட பாக்காம.. நடந்தது இதுதான் - கணவர் குறித்து சம்யுக்தா வேதனை!

Serials Samyuktha
By Sumathi May 14, 2023 05:22 AM GMT
Report

சின்னத்திரை நடிகை சம்யுக்தா கணவரை பிரிந்த காரணம் குறித்து தெரிவித்துள்ளார்.

காதல் திருமணம்

விஜய் டிவியில் ஒளிபரப்பான சிப்பிக்குள் முத்து என்ற சீரியலில் ஒன்றாக நடித்து காதலித்து திருமணம் செய்து கொண்ட சம்யுக்தா மற்றும் விஷ்ணுகாந்த் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர். இந்நிலையில் அதற்கான காரணம் குறித்து சம்யுக்தா இன்ஸ்டா லைவில் விளக்கம் அளித்துள்ளார்.

பீரியட்ஸ்ன்னு கூட பாக்காம.. நடந்தது இதுதான் - கணவர் குறித்து சம்யுக்தா வேதனை! | Serial Actress Samyukta Explanation About Husband

அதில், எங்கள் இருவருக்கும் திருமணத்திற்கு முன்பே பிரச்சனை ஏற்பட்டது. திருமண இன்விடேஷன் அடிப்பதில் தொடங்கி, திருமண புடவை எடுப்பது வரைக்கும் பல பிரச்சனைகளும் கருத்து வேறுபாடுகளும் ஏற்பட்டது. என்னுடைய விருப்பப்படி திருமணத்தில் எதுவுமே நடக்கவில்லை.

1 மாதத்தில் பிரிவு

நான் எல்லாமே விஷ்ணுகாந்துக்காக பொறுத்துக் கொண்டேன். திருமண செலவுகளை விஷ்ணுகாந்த் தான் செய்து வந்தார். அதனால் அவருக்கு பிடித்த மாதிரி திருமண இன்விடேஷன் அடித்திருந்தார்கள். அது பழைய மாடலாக இருக்கிறது என்று நான் என்னோடு வேலை பார்க்கும் நண்பர்களுக்கு கொடுப்பதற்காக மட்டும் வேற இன்விடேஷன் அடித்திருந்தேன்.

பீரியட்ஸ்ன்னு கூட பாக்காம.. நடந்தது இதுதான் - கணவர் குறித்து சம்யுக்தா வேதனை! | Serial Actress Samyukta Explanation About Husband

அதனால் பிரச்சனை வந்தது அதனால் திருமணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு என்னுடைய போன் காலை விஷ்ணுகாந்த் எடுக்காமல் தவிர்த்து விட்டார். விஷ்ணுகாந்த் வீட்டிலும் இல்லாததால் நான் அப்போதே கம்ப்ளைன்ட் கொடுத்திருந்தேன். பிறகு சமாதானமாகி தான் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகும் எங்களுக்கு ஒரு மாதம் ஒன்றாக தான் வாழ்ந்தோம்.

அப்போது சின்ன சின்ன பிரச்சனைகள் ஏற்படும் போது எதற்கெடுத்தாலும் அம்மா வீட்டிற்கு அனுப்பி வைத்துவிடுவார். கடைசியாக வரும்போது எனக்கு பீரியட்ஸில் இருந்தேன். எனக்கு பீரியட்ஸ் டைமில் அதிகமான வலி இருக்கும்.

அது சூட்டிங் ஸ்பாட்டில் இருப்பவர்களுக்கு கூட தெரியும். நான் அந்த அளவிற்கு வலியால் துடித்திருக்கிறேன். அந்த நிலையிலும் என்னை வீட்டை விட்டு எங்க அப்பாவோட போக சொல்லிட்டார். நான் அந்த வேதனையில் தான் வீட்டை விட்டு கிளம்பினேன் எனத் தெரிவித்துள்ளார்.