மார்பகங்களை கமெண்ட் பண்றாங்க; சாபம் விடுறாங்க - பிரபல சீரியல் நடிகை வேதனை
தன்னுடைய மோசமான அனுபவத்தை நடிகை நீலிமா ராணி பகிர்ந்துள்ளார்.
நீலிமா ராணி
பிரபல சீரியல் நடிகை நீலிமா ராணி. இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், "2008 இல் இருந்து 2023 வரையிலான என்னுடைய எல்லா வேலைகளும் என்னுடைய திருமணத்திற்கு பின்னர் நடந்தது.
வெளியே செல்லும் பொழுது என்னை பார்க்கும் அத்தனை நபர்களும் என் அருகில் வந்து பேச வேண்டும் என்று நினைப்பார்கள், பேசுவார்கள் பாராட்டுவார்கள். ஆனால் அதே நேரத்தில் சிலர் என்னை திட்டியும் இருக்கிறார்கள்.
மோசமான அனுபவம்
குறிப்பாக ஒரு பாட்டி விமான நிலையத்தில் வைத்து என்னை அந்தத் திட்டு திட்டினார் நாசமாக போய்விடுவாய் என்று சபித்தார். என்னை தவறாக விமர்சிப்பவர்கள் பற்றி எல்லாம் நான் என்றுமே கவலைப்பட்டதே கிடையாது. அவர்கள் எல்லாம் மனநல மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியவர்கள்.
எனது இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு தான் நான் இப்படி எடை போட்டு விட்டேன். அதனை சுற்றி நிறைய காரணங்கள் இருக்கின்றன. சில பேர் என்னுடைய மார்பகங்களை பற்றி எல்லாம் கமெண்ட் செய்கிறார்கள். அவர்களுக்கு உடனே நான் எனது குழந்தைக்கு பால் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.
அதனால் தான் அப்படி இருக்கிறது இன்று சொல்ல வேண்டும் என்று தோன்றும். இங்கு சொல்லி என்ன ஆகப்போகிறது என்று நான் அதை கடந்து விடுவேன்.” என வேதனை தெரிவித்துள்ளார்.