என் விவாகரத்துக்கு அவர் காரணமா? - கோபத்தில் கொந்தளித்த பிரபல நடிகை

Petchi Avudaiappan
in பிரபலங்கள்Report this article
விவாகரத்து குறித்து எழுந்த சர்ச்சைக்கு சீரியல் நடிகை ஹரிப்பிரியா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
சின்னத்திரை சீரியலில் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக திகழும் நடிகை ஹரிப்பிரியா விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற சீரியல் மூலம் சின்னத்திரைக்குள் அடியெடுத்து வைத்தார். அதனைத் தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான பிரியமானவள் தொடரின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியிருந்தார்.
தற்போது சிறிய இடைவெளிக்குப் பிறகு கண்மணி என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நடிகை ஹரிப்ரியா அவர்கள் 2012 ஆம் ஆண்டு பிரபல சீரியல் நடிகர் விக்னேஷ் குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ள நிலையில் திடீரென்று விவாகரத்து செய்வதாக அறிவித்து இருந்தார்கள்.
ஹரிப்பிரியா - விக்னேஷ் குமார் விவாகரத்துக்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் பிரபல தொகுப்பாளர் அசார் தான் முக்கிய காரணம் என்று கூறப்பட்டது. இந்த தகவலை ஹரிப்பிரியா மறுத்துள்ள நிலையில் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
அதில்,அந்த மனிதர் என்னுடைய பாய் பிரண்ட் கிடையாது. காதல் கிடையாது, என் வாழ்க்கை துணையும் இல்லை .மகிழ்ச்சியாக பேசுவது என்னுடைய பிறப்புரிமை. தவறு என்னுடையது இல்லை. பார்ப்பவர்களிடம் தான் உள்ளது. இதை நல்ல மனதோடு பார்த்தால் தவறாக தெரியாது என ஹரிப்பிரியா சரமாரியாக விளாசியுள்ளார்.