சீரியல் நடிகை சித்ரா நிறைய பேர காதலிச்சா,அவ நல்ல பொண்ணு இல்ல - பிரபல நடிகை பரபரப்பு பேச்சு..!
சீரியல் நடிகை சித்ரா நிறைய பேர காதலிச்சா,அவ நல்ல பொண்ணு இல்ல என பிரபல சீரியல் நடிகை ரேகா நாயர் தெரிவித்துள்ளார்.
சீரியல் நடிகையான சித்ரா மறைந்த கடந்த ஓராண்டு கடந்துவிட்டது. இவர் தனது காதல் கணவருடன் தனியார் ஹோட்டல் அறையில் இருந்த போது துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் சிறையில் இருந்து வெளியே வந்துள்ள ஹேம்நாத் தனக்கும் சித்ரா மரணத்திற்கும் தொடர்பில்லை என்றார். இதற்கு காரணம் ஒரு மாஃபியா கும்பல் தான் என்று பரபரப்பை கிளப்பியுள்ளார்.
அவரின் மரணத்திற்கும் அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். சித்ராவின் தோழியும் சீரியல் நடிகையுமான ரேகா நாயர் சித்ரா மற்றும் ஹேம்நாத் குறித்து திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் சித்ரா நல்ல பொண்ணான்னு கேட்டா இல்ல.தண்ணி அடிச்சா, நிறைய பேர காதலிச்சா.. நிறைய பேர் கூட இல்லீகள் கான்டெக்ட்ல இருந்தா. பிடிக்கலன்னா, விட்டுட்டு போயிருக்கலாம்.
அவளை கொலை பண்ண வேண்டிய அவசியம் இல்லை. யாரோட உயிரையும் எடுக்குற உரிமை யாருக்கும இல்ல. அவளோட நிச்சயதார்த்த போட்டோவ பார்த்ததுமே நீங்க கல்யாணம் பண்ணிக்காதீங்கன்னு சொன்னேன். சித்ரா கேட்கல. சாகுறப் பீரியடில் சித்ரா எப்படி இருந்தான்னு எனக்கு நல்லா தெரியும்.
அவ்ளோ அவசரமா கல்யாணம் பண்றதுக்கான காரணமும் அதுதான். ஆனால் அதை எங்கேயும் சொல்ல முடியாத நிலைமையில இருக்கேன்.
சரியா போஸ்ட்மார்ட்டம் பண்ணியிருந்தா தெரிஞ்சுருக்கும். அவ்ளா டீப்பா போஸ்ட்மார்ட்டம் பண்ணல. சித்ரா எனக்கு க்ளோஸ் ஃபிரண்ட் இல்ல.
ஒன்னா வேலை பார்த்திருக்கோம், பேசியிருக்கோம், பழகியிருக்கோம் அவ்ளோதான். நான் சொல்லியும் கேட்கமா என் கண்ணு முன்னாடியே போயிட்டாலேங்ற ஆதங்கம்தான். அவளோட மர்மமான வாழ்க்கையில அவளே மர்மமாயிட்டா. சித்ரா மாதிரி யாருக்கும் நடக்கக்கூடாது.
அவனுக்கு சட்டப்படி தண்டனை கிடைக்கனும். தான் மேல பட்ட கறையை துடைக்க, தன்னை நல்லவன் போல் காட்டிக்கதான் ஹேம்நாத் முயற்சி செய்கிறான்.
தன்னை குற்றமற்றவன்னு காட்டிக்கிட்டா, எல்லார்கிட்டேயும் பணம் வாங்கலாம். பெண்களை விற்கலாம், பெண்களை தனக்கு ஏத்தாமாதிரி பயன்படுத்திக்கலாம்.
சோறு திங்கிற ஆம்பளையா இருந்தா அவனுக்கு குத்தும். கடவுள்னு ஒருத்தன் இருக்கான் அவன் வச்சு செய்வான். ஜெயில்ல இருந்து வந்து 3 மாசம் கூட ஆகல அதுக்குள்ள 11 பெண்கள் கூட இருக்கான்.
அதிலேயும் சில பெண்கள், என்னையும் ஏமாத்திட்டான் என்று சொல்லிதான் அழுகிறார்கள். தேவைப்படும் போது எல்லா ஆதாரத்தையும் கோர்ட்டில் காட்டுவேன். இவ்வாறு ரேகா நாயர் தனது பேட்டியில் கூறியுள்ளார்.