1 முதல் 5ம் வகுப்பு வரை செப்.13ம் தேதி பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அதிரடி அறிவிப்பு!

open school 13 september 1 to 5
By Anupriyamkumaresan Sep 12, 2021 10:17 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in கல்வி
Report

 கொரோனா நோய்த்தொற்று குறைந்து வருவதை கருத்தில் கொண்டு மாநிலத்தில் உள்ள பள்ளிகள் 1 முதல் 5ம் வகுப்பு வரை செப்டம்பர் 13ம் தேதி முதல் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு வெளியிட்டுள்ளது. திரிபுரா மாநில அரசு 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பள்ளிகளைத் திறக்க ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி பள்ளிகள் செப்டம்பர் 13 முதல் COVID-19 நெறிமுறைகளுடன் மீண்டும் திறக்கப்படும். அம்மாநில அரசாங்கம் ஏற்கனவே 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை மீண்டும் தொடங்கியுள்ளது.

1 முதல் 5ம் வகுப்பு வரை செப்.13ம் தேதி பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அதிரடி அறிவிப்பு! | September 13 Onwards School Open 1 5Th Standard

கொரோனா தொற்று படிப்படியாக குறைந்ததையடுத்து அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. மாநிலத்தில் தற்போது செயலில் உள்ள கொரோனா தொற்றின் எண்ணிக்கை 667, இறப்பு விகிதம் 0.96% ஆகும். மேலும் மாணவர்கள் நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ள, அவர்கள் பெற்றோரின் ஒப்புதல் பெற வேண்டியது கட்டாயமான ஒன்றாகும்.