செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பது சரியல்ல...உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

V. Senthil Balaji DMK Madras High Court
By Karthick Sep 05, 2023 12:10 PM GMT
Report

இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பது சரியல்ல என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

செந்தில் பாலாஜி - ED

சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் விசாரிக்கப்பட்ட நிலையில், அவர் மீது 3000 பக்க குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை சென்னை முதன்மை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

senthil-balaji-shouldnt-continue-as-minister

இதற்கிடையில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் வேண்டி கோரிய மனுவில் நேற்று சென்னை உயர் நீதிமன்றம் இந்த மனுவை முதன்மை நீதிமன்றமே விசாரிக்க வேண்டும் என கூறியுள்ளது.

உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

இந்நிலையில், செந்தில் பாலாஜி அமைச்சராக தொடரக்கூடாது என கோரிக்கை வைத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கில் தற்போது சென்னை உயர் நீதிமன்றம், இலாகா இல்லாத அமைச்சராக அமைச்சர் செந்தில் பாலாஜி நீடிப்பது சரியல்ல என குறிப்பிட்டுள்ளது.

senthil-balaji-shouldnt-continue-as-minister

சட்டவிரோத பண பரிவர்த்தனையில் கைதாகி இருக்கும் அவர் அமைச்சராக தொடர்வது தார்மீக ரீதியில் சரியானது அல்ல என தனது தீர்ப்பில் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.