டார்ச்சர் கொடுத்தாங்களா என்ற கேள்வி...நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி செய்தது?

V. Senthil Balaji DMK Enforcement Directorate
By Karthick Aug 12, 2023 11:32 AM GMT
Report

அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், நீதிமன்ற வளாகத்தில் அடித்து துன்புறுத்தினார்களா என செய்தியாளர்கள் கேட்டபோது, செந்தில் பாலாஜி எதுவும் கூறாமல் மவுனம் காத்திருந்தார்.

புழல் சிறையில் செந்தில் பாலாஜி 

senthil-balaji-maintains-silence-for-questions

இலாகா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சென்னை முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி வரும் ஆக்.25 -ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்துள்ளது. விசாரணை முடிந்து அமலாக்கத்துறை இன்று செந்தில் பாலாஜியை ஆஜர்படுத்தியபோது, மேலும் விசாரணை மேற்கொள்ள 5 நாட்கள் அவகாசம் கோரி, அமலாக்கத்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

நிராகரித்த நீதிபதி  

அமலாக்கத்துறையின் இந்த கோரிக்கையை நீதிபதி அல்லி நிராகரித்தார். பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறைக்கு கொண்டு செல்ல நீதிமன்ற வாசில் நின்றிருந்த போது, அவரிடம் செய்தியாளர்கள் அமலாக்கத்துறையினர் விசாரணையின் போது, அடித்து துன்புறுத்தினாரா என கேள்வி எழுப்பினார்கள்.

senthil-balaji-maintains-silence-for-questions

அதற்கு எந்த பதிலும் அளிக்காமல் செந்தில் பாலாஜி அமைதியாக நின்றிருக்க அவரின் வழக்கறிஞர், நீதிமன்ற காவலில் இருப்பதால் எதுவும் இப்பொது பேசமுடியாது என தெரிவித்தார்.

3000 பக்க குற்றப்பத்திரிகை  

senthil-balaji-maintains-silence-for-questions

அதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்து அமலாக்கத்துறை 3000 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. விசாரணையின் போது 300'க்கும் ஏற்பட்ட கேள்விகளும் செந்தில் பாலாஜியிடம் கேட்கப்பட்டதாகவும் அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.