பொங்கலும் சிறையில் தான் - செந்தில் பாலாஜி மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்..!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மேல்முறையீடு மனுவில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜி
நேற்று 15-வது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை நீட்டித்து சென்னை முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.கடந்த ஜூன் மாதம் முதல் சிறைவாசம் அனுபவித்து வரும் செந்தில் பாலாஜி தொடர்ந்து ஜாமீன் கேட்டு மேல்முறையீடு மனுவை சென்னை முதன்மை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், தான் நேற்று முன்தினம் செந்தில் பாலாஜியின் நண்பர் கொங்கு மணி சொந்தமான இடங்களிலும், செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் கட்டி வரும் கரூர் வீட்டிலும் வருமானவரி துறை சோதனை நடத்தியுள்ளது.
தள்ளுபடி
இந்த பரபரப்பான சூழலில் செந்தில் பாலாஜி ஜாமீன் மேல்முறையீட்டு மனுவில், சென்னை முதன்மை நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சரியான ஆதாரங்கள் இல்லாத நிலையில், அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 3-வது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.