ED'யின் வழக்கு ஆவணங்கள்...விவரங்களை கேட்டு செந்தில் பாலாஜி மனு
அமலாக்கத்துறை தாக்கல் செய்த ஆவணங்கள் உட்பட அனைத்து விவரங்களை கேட்டு செந்தில் பாலாஜி தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
செந்தில் பாலாஜி வழக்கு
இலாகா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வரும் 25-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் அமலாக்கத்துறை மேற்கொண்ட விசாரணையில் பல தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கூறப்படும் நிலையில், 3000 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை சென்னை முதன்மை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆவணங்களை கேட்டும் செந்தில் பாலாஜி
இந்த நிலையில் குற்றப்பத்திரிகை உள்ளிட்ட வழக்கு ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் வழங்கக்கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவை விரைவாக விசாரிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. அப்போது நீதிபதில் அல்லி, இது தொடர்பாக அமலாக்கத்துறைக்கு தெரிவிக்கும்படி கூறினார்.