மேலும் நீடிக்கப்பட்ட நீதிமன்ற காவலில்..புழல் சிறைக்கு மீண்டும் செல்லும் செந்தில் பாலாஜி

V. Senthil Balaji Tamil nadu Enforcement Directorate
By Karthick Aug 28, 2023 09:20 AM GMT
Report

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்று நிறைவடைந்த நிலையில், வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி வரை மீண்டும் அந்த காவலை நீட்டித்துள்ளது சிறப்பு நீதிமன்றம்.

செந்தில் பாலாஜி - ED   

சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் விசாரிக்கப்பட்ட நிலையில், அவர் மீது 3000 பக்க குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை சென்னை முதன்மை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த ஆவணங்கள் பற்றிய தகவலை பெற செந்தில் பாலாஜி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கின் விசாரணை முதன்மை நீதிமன்றத்தில் இருந்து சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

மேலும் நீடிக்கப்பட்ட நீதிமன்ற காவலில்..புழல் சிறைக்கு மீண்டும் செல்லும் செந்தில் பாலாஜி | Senthil Balaji Custody Extended Till September 15

மீண்டும் நீட்டிக்கப்பட்ட நீதிமன்ற காவல்  

எம்.எல்.ஏ'க்கள் மற்றும் எம்.பி'க்கள் மீதான வழக்கை விசாரிக்கும் இந்த சிறப்பு நீதிமன்றத்தில், கடந்த 28-ஆம் தேதி நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில், இலாகா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜி காணொளி காட்சி வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டார்.

அன்றுடன் அவருக்கு நீதிமன்ற காவல் கேடு முடிவடைந்த நிலையில், மேலும் 3 நாட்கள் நீதிமன்ற காவலை நீட்டித்தது சிறப்பு நீதிமன்றம். இன்றுடன் அந்த கால அவகாசம் முடிவடைந்த நிலையில், அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

மேலும் நீடிக்கப்பட்ட நீதிமன்ற காவலில்..புழல் சிறைக்கு மீண்டும் செல்லும் செந்தில் பாலாஜி | Senthil Balaji Custody Extended Till September 15

அப்போது அவருக்கு வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது சிறப்பு நீதிமன்றம்.