பதிவான வாக்குமூலம் - அமலாக்கத்துறையிடம் வாக்குமூலம் அளித்த செந்தில் பாலாஜி..!
விசாரணைக்காக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அழைத்து சென்ற நிலையில், நேற்று அவர் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கியதாக தகவல் வெளிவந்துள்ளது.
செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 2015-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது, பணம் பெற்று வேலை வாங்கி தருவதாக எழுந்த புகார்களில், தற்போது அவர் அமலாக்கத்துறையின் விசாரணை கட்டுப்பாட்டில் உள்ளார்.
செந்தில் பாலாஜியின் இந்த கைதிற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது மனைவி மேகலா உச்சநீதிமன்ற சென்ற போதும், அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
விசாரணையை துவங்கிய அமலாக்கத்துறை
இந்நிலையில் தான், நேற்று முதல் செந்தில் பாலாஜியை கட்டுப்பாட்டில் எடுத்து அமலாக்கத்துறை தனது விசாரணையை துவங்கியுள்ளது. இந்த விசாரணையின் போது அமலாக்கத்துறை முழு ஒத்துழைப்பு வழங்கியதாகவும் கூறப்படுகின்றது.
அமலாக்கத்துறை சார்பில் கேட்கப்பட்ட கேள்விகளில் செந்தில் பாலாஜி பதிலளித்தாகவும், அதனை அமலாக்கத்துறை ரெகார்ட் செய்துள்ளதாக கூறப்படுகின்றது. இதையடுத்து செந்தில் பாலாஜியின் வாக்குமூலங்களின் அடிப்படையில் அவரை மேலும் விசாரணைக்கு உட்படுத்த அமலாக்கத்துறை முடிவெடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.