Vijay-ன் வாக்குமூலம்! செந்தில் பாலாஜிக்கு சிக்கல்?
கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சிபிஐ விசாரணை நடந்து வருகிறது.
விஜய் மூன்று முறை விசாரணைக்கு ஆஜரான நிலையில் அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
நேற்று சுமார் 6 மணிநேரம் விசாரணை நடந்துள்ளது, அவரிடம் 95 கேள்விகள் கேட்கப்பட்டதாகவும், விஜய்யின் கூட்டத்தில் செந்தில் பாலாஜி ஆட்கள் கலந்து கொண்டார்களா என்பது குறித்து கேட்கப்பட்டதாகவும் தெரிகிறது.
மேலும் கரூர் சம்பவம் நடந்த அடுத்த சில நிமிஷங்களில் செந்தில் பாலாஜி தனது ஆதரவாளர்களுடன் நிகழ்விடத்துக்கு வந்தது குறித்தும், பிறகு தவெக நிர்வாகிகள் செய்த ஏற்பாடுகள் தொடர்பாக செந்தில் பாலாஜி பொதுவெளியில் சுமத்திய குற்றச்சாட்டுகள் குறித்தும் கேள்விகள் கேட்டுள்ளனர்.
இதுதொடர்பில் டெல்லியிருந்து மூத்த பத்திரிக்கையாளர் அளித்த பேட்டி,