அண்ணாமலை வெறும் Just like that தான் - வம்பிழுக்கும் செல்லூர்
அண்ணாமலைக்கு எடப்பாடியின் அருமை தெரியவில்லை என அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம் செய்துள்ளார்.
அதிமுக பொதுக்கூட்டம்
மதுரையில் நடைபெறவுள்ள அதிமுகவின் பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகின்றது. அதிமுகவின் அதிகாரபூர்வ பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து நடக்கும் முதல் பொதுக்குழு என்பதால், இதற்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
Just like that தான்
விழாவிற்கான ஏற்பாடுகளை பார்வையிட்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், அண்ணாமலை ஓபிஎஸ்'க்கு ஆதரவாக பேசிய நிலையில், அது தங்களுக்கு வெறும் just like that தான் என கூறி, அண்ணாமலைக்கு தங்களுக்கும் என்ன இருக்கு என கேள்வி எழுப்பினார்.
எடப்பாடியின் அருமை தெரியவில்லை
தங்களை பொறுத்தவரையில் மோடி, அமித் ஷா, நட்டா மற்றும் அமித் ஷா மட்டும் தான் என பேசிய செல்லூர் ராஜு, கூட்டணி பேச்சுவார்த்தையின் போது, 38 தலைவர்களில் மோடிக்கு அருகில் எடப்பாடி பழனிசாமியை உட்கார வைக்கும் அளவிற்கு அவரின் அருமை உள்ளது கூறினார்.
தங்கள் கொள்கை வேறு என்றும் அண்ணாமலை தனது கட்சியை வலுப்படுத்துவதற்காக பேசுகிறார் என கூறி, தேர்தல் சமயத்தில் தான் தாங்கள் கூட்டணி வைக்கிறோம் என்றும் அண்ணாமலையின் பேச்சிற்கு பதிலடி கொடுத்தார்.