ஜெயிலர் படத்துக்கு ரஜினி ஹீரோ, எங்களுக்கு எடப்பாடி தான் ஹீரோ - செல்லூர் ராஜு
மதுரை மாவட்டத்தில் நடைபெறவுள்ள மாநில மாநாட்டிற்கான அழைப்பிதழை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கோவிலில் வைத்து வழிபாடு செய்துள்ளார்.\
அதிமுக மாநாடு
எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற கொண்ட பிறகு முதல் மாநில மாநாடு வரும் 20-ஆம் தேதி மதுரையில் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை செல்லூர் ராஜு மேற்கொண்டு வருகின்றார்.
சில தினங்கள் முன்பு, மாநாட்டின் அழைப்பிதழை அறிமுகப்படுத்திய அவர், இன்று மதுரை காமராஜர் சாலை, அரசமரம் விநாயகர் கோவிலில் அழைப்பிதழை வைத்து வழிபாடு செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜு, மாநாட்டிற்கான அழைப்பிதழை நிர்வாகிகளை மக்களின் வீட்டிற்கு நேரில் சென்று அளிக்கவுள்ளதாக தெரிவித்தார்.
எடப்பாடி தான் ஹீரோ
அதே போல, ஜெயிலர் படத்தில் ரஜினி ஹீரோவோ, அதே போல தங்களது மாநாட்டை பொறுத்தவரையில், எடப்பாடி பழனிசாமி தான் ஹீரோ என்று கூறியுள்ளார்.இந்த மாநாட்டில் 1 லட்சத்தி, 25 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர் என கூறிய செல்லூர் ராஜு, திமுக என்ற கட்சியை ஒழிக்கும் சக்தியாக இந்த மாநாடு உருவாகும் என்றும் அவர் கூறினார்.