ஐடி ரைட்டாவது - 2G'யாவது? ரைமிங்கில் திமுகவை கலாய்த்த செல்லூர் ராஜு!!
அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் 52-ஆம் ஆண்டின் துவக்க விழா மதுரையில் நடைபெற்றது.
அதிமுக 52வது ஆண்டு துவக்க விழா
அதிமுகவின் 52வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே ராஜு தலைமையில் மதுரை முனிச்சாலை பகுதியில் நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, திமுக போல கட்சியை வைத்து பொழப்பு நடத்துகிற குடும்பம் இல்லை அதிமுக என்று கூறி, புரட்சித்தலைவர் தங்களுக்கு கற்றுக் கொடுத்ததை போல், ரத்தம் வேர்வை சிந்தி உழைத்த பணத்தை வைத்து கூட்டம் நடத்துபவர்கள் தான் அதிமுக தொண்டர்கள் என்றார்.
அதிமுகவை அழிக்க ஸ்டாலின், உதயநிதி, இன்பநிதி இல்லை - ஏன் அவுங்க அப்பா கருணாநிதியாலே முடியவில்லை, நீங்கள் எல்லாம் எம்மாத்திரம் என்று பேசி, அதிமுகவிற்கு ஆறுமுகம் கொண்ட எடப்பாடி பழனிச்சாமி தலைமை தாக்கியுள்ளார் என்றும் அதிமுகவை நம்பி கொட்டவர்கள் யாரும் இல்லை என்றும் நம்பாமல் கெட்டவர்கள் தான் இந்த உலகத்தில் அதிகம் என்று பேசினார்.
ஐடி ரைட்டாவது - 2G'யாவது?
எத்தனை வழக்குகள் போட்டாலும் அதிமுக முன்பு அது நிக்காது என அதிரடியாக தெரிவித்த செல்லூர் ராஜு, பேரிடர் காலங்களில் கஜானாவே காலியாகி ஸ்தம்பித்தது என்பதை சுட்டிக்காட்டி, ஆனால் அது எல்லாம் தவுடுபடியாக்கியவர் எடப்பாடியார் என பெருமிதம் தெரிவித்து, மக்கள் மனம் கலங்காமல் ஆட்சி நடத்தி வந்தார் என்றும் அடிப்படை தொண்டனாக இருந்து படிப்படியாக கட்சியில் முன்னேறி அம்மாவின் அன்பை பெற்று தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்கள் பெற்று எடப்பாடியார் நல்லாட்சி நடத்தி வந்தார் என புகழாரம் சூட்டினார்.
மத்திய அரசுகளின் எத்தனை ஐடி ரைட் நடத்தினாலும், போங்கடா, நாங்கள் பார்க்காத திகார் ஜெயிலா, 2 Gயா, நாங்கள் செய்யாத ஊழலா..? என மார்தட்டிக் கொள்பவர்கள் தான் திமுகவினர் என கடுமையான விமர்சனத்தை முன் வைத்து, கலைஞருடைய பேரன் என்கிற ஒரே காரணத்தால் இன்று விளையாட்டு துறை அமைச்சர் ஆக்கியுள்ளனர் என உதயநிதியையும் விமர்சனம் செய்துள்ளார்.