ஒரு சீனில் தாவணியை கழட்ட மறுத்த சீதா... - ஆத்திரத்தில் பளாரென அடித்த பிரபல நடிகர்...? - வெளியான தகவல்...!

Tamil Cinema Seetha
By Nandhini Feb 16, 2023 08:30 PM GMT
Report

நடிகை சீதா -

‘ஆண்பாவம்’ படம் மூலம் அறிமுகமான சீதா. தமிழ் சினிமாவில் 80களில் முன்னனி நடிகையாக வலம் வந்த இவர் ரஜினி, கமல், பார்த்திபன், பாண்டியராஜன் என முன்னனி நடிகர்களுடன் நடித்து மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார்.

நடிகை சீதா தமிழ் , தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். ‘புதிய பாதை’ படத்தில் பார்த்திபனுடன் இணைந்து நடித்தார். அதன் பின்னர், நடிகர் பார்த்திபனும், சீதாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். நட்சத்திர ஜோடி வலம் வந்த இவர்கள் 11 ஆண்டுகால திருமண வாழ்க்கையை முறித்துக் கொண்டார்கள்.

seetha-indian-actress-pandiarajan-actor

சீதாவை பளாரென அடித்த பிரபல நடிகர்...?

நடிகை சீதாவை அறிமுகம் செய்தவர் நடிகர் பாண்டியராஜன்தான். சீதாவின் புகைப்படங்களை பார்த்து, அவருக்கு பிடித்து போக, நேராக சீதா வீட்டிற்கே சென்று அவரின் அப்பாவிடம் சீதாவை நடிக்க வைக்க அனுமதி வாங்கியுள்ளார். ஆனால், சீதாவிற்கு நடிப்பில் ஆர்வம் கிடையாது. ஒரு வழியாக அவரை பாண்டியராஜன் சம்மதிக்க வைத்துள்ளார்.

முதன் முதலில் சீதாவை ‘ஆண்பாவம்’ படத்தில் நடிக்க வைத்தார் பாண்டியராஜன். இப்படத்தில் படப்பிடிப்பு ஒன்றில் கடிகாரம் ஒன்று சூடான நீரில் விழ, அதை எடுப்பதற்கு சீதா தான் அணிந்திருந்த தாவணியின் மேலாடையை வடிகட்டி மாதிரி பயன்படுத்தி அந்த கடிகாரத்தை எடுக்க வேண்டும். இந்த சீனை பாண்டியராஜன் சொன்னதும், சீதா நான் தாவணியை கழட்ட முடியாது என்று கூறியுள்ளார்.

அதற்கு பாண்டியராஜன், இல்லமா கதைப்படி அப்படி செய்தால் தான் சரியாக இருக்கும் என்று கூற, சீதா முடியாது என்று கூறியுள்ளார். சரி வேண்டாம்... சைடு முந்தானையாவது வடிகட்டியாக பயன்படுத்தி கடிகாரத்தை எடு என்று கூறியுள்ளார்.

சொன்ன மாதிரி அந்த காட்சியில் நடித்து சீதா உடனே கேமராவை பார்த்துள்ளார். இதனால் கோபமடைந்த பாண்டியராஜன் ஏன் கேமராவை பார்த்த? என்று கேட்டுள்ளார்.

அதற்கு சீதா... சரியா என்று கேட்கதான் பார்த்தேன் என்று கூறியிருக்கிறார். இதை பார்க்க நாங்க இருக்கோம் என்று சொல்லிவிட்டு மறுபடியும் அந்த சீனை எடுத்துள்ளார் பாண்டியராஜன்.

மீண்டும் சீதா கேமராவை பார்க்க, கோபத்தில் பாண்டியராஜன் கிட்டப் போய் கை ஓங்க சீதா படக்கென்று மேல எழ கை சீதாவின் கன்னத்தில் பட்டு விட்டதாம். உடனே அழுது ஆர்ப்பாட்டம் செய்துள்ளார் சீதா. அதன் பிறகு சீதாவை சமாதானம் செய்து மீண்டும் நடிக்க வைத்துள்ளார் பாண்டியராஜன்.