சீர்காழி நகரின் கழிவு கிடங்காக மாறி வரும் புறவழிச்சாலை..வாகன ஓட்டிகள் அவதி
சீர்காழி நகரின் கழிவு கிடங்காக மாறி வரும் புறவழிச்சாலை. மருத்துவ கழிவுகள்,இறைச்சி கழிவுகள் என சுகாதார சீர்கேட்டால் வாகன ஓட்டிகள் அவதி,சீரமைக்க கோரிக்கை.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்க கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் புறவழிச்சாலை அமைக்கபட்டது.தொலைதூர பேருந்துகள் சரக்கு வாகனங்கள்,சுற்றுலா வாகனங்கள் என பெரும்பான்மை போக்குவரத்து புறவழிச்சாலையில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சீர்காழி- சிதம்பரம் புறவழிச்சாலையின் இருபுறமும் தற்போது குப்பை மற்றும் கழிவுகள் கொட்டும் இடமாக மாறிவருகிறது.இரவு நேரங்களில் நகர்புற கழிவுகள் குப்பைகள் தனியாரில் கொண்டுவரபட்டு புறவழிச்சாலையின் இருபுறமும் கொட்டி செல்கின்றனர்.
இதே போல் மருத்துவ கழிவுகள்,இறைச்சி கழிவுகள்,உணவக கழிவுகள் மூட்டை மூட்டையாக கட்டி வீசி செல்கின்றனர்.அவற்றை நாய் பண்றிகள் கடித்து இழுத்து சாலையோரம் முழுவதும் சிதறவிடுகின்றன.
இதனால் வாகன ஓட்டிகள் சாலையோரம் வாகனங்களை நிறுத்தவே முடியாத அளவிற்கு சுகாதார சீர்கேடு நீறைந்த சாலையாக மாறியுள்ளது சீர்காழி- சிதம்பரம் புறவழிச்சாலை.
எனவே மாவட்ட நிர்வாகம் புறவழிச்சாலை சீசோரமைத்தும் கழிவுகள் கொட்டி செல்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வாகன ஓட்டிகளும் அப்பகுதி பொது மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.