செய்தியாளர் சந்திப்பில் மயங்கி விழுந்த சீமான் : காரணம் என்ன?

seeman ntk fainted pressconference
By Irumporai Apr 02, 2022 07:18 AM GMT
Report

நாம் தமிழர் கட்சியின் சீமான், திருவொற்றியூரில் செய்தியாளர் சந்திப்பின்போது திடீரென மயங்கி விழுந்தார். இதனைத்தொடர்ந்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கடந்த சில நாட்களாக மக்களை சந்தித்து வருகிறார் . ஆளும் கட்சி குறித்தும் விமர்சனம் செய்து வருகிறார் , இந்த நிலையில் இன்று சீமான் திருவொற்றியூர், அண்ணாமலை நகர் பகுதியில் வீடுகள் இடிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடினார்.

திருவொற்றியூரில் மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பிற்கு பிறகு நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தி அண்ணா நகர் மக்களுக்கு மாற்று இடம் கொடுத்து விட்டு சுரங்கப் பாதை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் . இல்லை என்றால் போராடிக் கொண்டே இருப்போம் என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்கள் மத்தியில் பேசினார்.

இதையடுத்து சென்னை திருவொற்றியூரில் செய்தியாளர் சந்திப்பிற்கு பிறகு சீமான்  திடீரென மயங்கி விழுந்தார். வெயில் அதிகமாக இருந்ததன் காரணமாக சீமான் திடீரென மயங்கி விழுந்தார் என்று கூறப்படுகிறது . இதனால் பதறிப்போன அவரது ஆதரவாளர்கள் மற்றும் செய்தியாளர்கள் அவருக்கு முதலுதவி அளித்தனர்.


வெயிலின் காரணமாக அவர் மயங்கி விழுந்ததாக கூறப்பட்டுள்ளது. பின்னர் உடனடியாக சீமானை தூக்கி சென்று 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் சிகிச்சைக்கு பிறகு உடல்நிலை சீரானதால் சீமான் வீடு திரும்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.