எங்க பரம்பரைக்கே பயமில்லை...என் மேல 128 வழக்கு இருக்கு....சீமான்
நேற்று அண்ணாமலை மீது விமர்சனம் வைத்திருந்த நிலையில், அதற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலடி கொடுத்துள்ளார்.
அண்ணாமலை விமர்சனம்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று செய்தியாளர்களை சந்தித்த போது, சீமானின் தைரியம் தனக்கு மிகவும் பிடிக்கும் என குறிப்பிட்டு, ஆனால் ஒரே ஒரே வழக்கின் காரணமாக அவர் இவ்வாறு பயந்துவிடுவார் என தான் நம்பவில்லை என தெரிவித்தார்.
திமுக தொடர்ந்து விமர்சித்து வந்த சீமான், ஒரே வழக்கின் காரணமாக இப்படி திமுகவை பங்காளிகள் என கூறுவார் என்பதை தான் கனவிலும் பார்க்கவில்லை என தெரிவித்து சீமான் மீதிருந்த மரியாதையே தனக்கு குறைந்து விட்டதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சீமான் பதிலடி
இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பயம் தங்கள் பரம்பரைக்கே இல்லை என குறிப்பிட்டு, தான் பார்த்தால் பயப்படுபவரை போல உள்ளதா? என கேள்வி எழுப்பிய அவர், பயப்படுவது தங்கள் இனத்திற்க்கே இல்லை என தெரிவித்துள்ளார்.
அதே போல, தன் மீது 128 வழக்குகள் இருப்பதாகவும், தான் எத்தனை முறை சிறைக்கு சென்றுள்ளேன் என கூறிய அவர், ஒரு முறையாவது அண்ணாமலை சிறைக்கு சென்றுள்ளாரா? என பதில் கேள்வி எழுப்பியிருக்கிறார்.