திராவிட கட்சிகள் தவிர மற்ற கட்சிகளுடன் கூட்டணி - சீமான் திட்டவட்டம்!
திராவிட கட்சிகள் தவிர மற்ற கட்சிகள் வந்தால் கூட்டணி குறித்து பேசலாம் என்று சீமான் பேட்டியளித்துள்ளார்.
சீமான்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிந்த பின்னர்.தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்கள் சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர் "இருக்கின்ற சட்டமே எல்லாருக்கும் சமமாக இல்லை. அப்புறம் ஏன் இந்த பொது சிவில் சட்டம்? இலங்கையில் மீனவர்கள் கைது செய்யப்பட்டதை குறித்து அண்ணாமலையிடம் தான் கேட்க வேண்டும்.
மற்ற கட்சிகளுடன் கூட்டணி
இந்த நாட்டில் யாராக இருந்தாலும் அரசியல் பேச வேண்டும், ஆளுநர் அரசியல் பேசலாம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்தது ஜனநாயக படுகொலை.
விஜய் அரசியலுக்கு வந்துவிடுவாரோ என்று பயம் சிலருக்கு அதனால்தான் அவர் திரைப்படத்தில் புகையைப்பிடிப்பதை அரசியல் ஆக்குகிறீர்கள். ஏன் இதற்கு முன்பு அவர் திரைப்படத்தில் மது குடித்ததில்லையா?
திராவிட கட்சிகள் தவிர மற்ற கட்சிகள் வந்தால் கூட்டணி குறித்து பேசலாம் என்று பேட்டியளித்துள்ளார்.