சீமான் ஒரு பாலியல் குற்றவாளி - தலைவர் ராஜீவ்காந்தியை விமர்சிக்க அருகதை கிடையாது - எம்.பி ஜோதிமணி ஆவேசம்

Seeman
By Nandhini May 22, 2022 06:03 AM GMT
Report

சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தில் பணி நிரந்தரம் கோரி நேற்று 6-வது நாளாக தொடர்ந்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

700-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், பட்டினப்பாக்கத்தில் நடந்து கொண்டிருக்கும் இந்தப் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார்.

பின்னர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ராஜீவ் காந்தி வழக்கில் வெற்றியை பெற்றது பேரறிவாளன் தான். அவரே சட்டங்களை படித்து, சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து இந்த வழக்கை முடித்து வென்றுள்ளார். மற்ற யாரும் இதற்கு காரணம் இல்லை. மேலும், ராஜீவ் காந்தி என்ன பெரிய தியாகியா? ரூ.400 கோடி பீரங்கி ஊழல், ஒரு ராணுவத்தை அனுப்பி இனத்தையே அழித்தது என்று பல விஷயத்தை செய்துள்ளார். ராகுல் காந்தி தனது தந்தையின் மரணத்திற்கு காரணமானவர்களை மன்னித்துவிட்டேன் என்று தெரிவித்தார். ஆனால் அவர் யார் எங்களை மன்னிக்க? நாங்கள்தான் உங்களை மன்னித்தோம் என தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து அவதூறாக பேசியதாக சீமான் மீது காங்கிரஸ் கட்சியினர் கொந்தளிப்பில் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில், தனது டுவிட்டர் பக்கத்தில் கரூர் எம்பி ஜோதிமணி இது தொடர்பாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

அந்தப் பதிவில், சீமான் ஒரு பாலியல் குற்றவாளி என்றும் சட்டம் சரியாக செயல்பட்டிருக்குமானால் அவர் இந்நேரம் இருந்திருக்க வேண்டிய இடம் சிறைச்சாலை. சீமானுக்கெல்லாம் இந்தியாவின் இளைய பிரதமர், தொழில்நுட்ப இந்தியாவின் தந்தை, பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் நாயாகன், தலைவர் ராஜீவ்காந்தியை விமர்சிக்கின்ற அருகதை கிடையாது என காட்டமாக பதிவிட்டுள்ளார்.

சீமான் ஒரு பாலியல் குற்றவாளி - தலைவர் ராஜீவ்காந்தியை விமர்சிக்க அருகதை கிடையாது - எம்.பி ஜோதிமணி ஆவேசம் | Seeman Jothimani