விசாரணைக்கு வந்தால் விஜயலட்சுமியும் வரவேண்டும்...நிபந்தனை வைத்த சீமான்!!
தான் விசாரணைக்கு வரும் போது, தன் மீது புகார் அளித்த விஜயலட்சுமியும் வர வேண்டும் என நாம் தமிழர் சீமான் கோரிக்கை வைத்துள்ளார்.
சீமான் - விஜயலக்ஷ்மி
திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியது, 7 முறை கருக்கலைப்பு செய்தது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புகார் அளித்து அதற்கான விசாரணையும் எதிர்கொண்டு, கோர்ட்டில் நேரில் ஆஜராகி வாக்குமூலமும் அளித்துள்ளார் விஜயலக்ஷ்மி.
இதில் சீமான், ஆஜராகும் படி நேற்று இரண்டாவது முறையாக காவல் துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், இரண்டாவது முறையும் அதனை ஏற்க மறுத்துள்ளார் சீமான். மறுத்ததற்கான சில காரணங்களை கூறியதோடு, ஒரு நிபந்தனையும் சீமான் காவல் துறையினரிடம் வைத்துள்ளார்.
சீமான் நிபந்தனை
தான் விசாரணைக்கு வரும் போது, தன் மீது புகார் அளித்த விஜயலக்ஷ்மி மற்றும் அவருக்கு துணையாக இருக்கும் வீரலக்ஷ்மியும் உடனிருக்க வேண்டும் என சீமான் தெரிவித்துள்ளார்.
ஒரே நாளில் ஒரே சமயத்தில் முலரையும் வைத்து, விசாரணை மேற்கொண்டு குற்றச்சாட்டின் உண்மைத்தன்மையை அறிந்துகொள்ள கூறுவதாக சீமான் தரப்பில் நிபந்தனை முன்வைக்கப்பட்டது.