நான்தான் இந்த நாட்டுக்கு பாதுகாப்பே - கொதித்தெழுந்த சீமான்!
நான்தான் இந்த நாட்டுக்கு பாதுகாப்பு என சீமான் தெரிவித்துள்ளார்.
நாட்டுக்கு பாதுகாப்பு
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். "என் சொந்த நாட்டில் எனக்கு பாதுகாப்பு தேவையில்லை.
நான் தான் இந்த நாட்டுக்கு பாதுகாப்பு. வாக்குகளை விற்கும் சந்தையாக தேர்தலை மாற்றிவிட்டனர். மானுடத்தை கொன்றுவிட்டு மதத்தை தூக்கி நிறுத்துவதா? கைக்கூலி, ஓட்டுப்பிச்சை என்று கூறுவதா?
சீமான் ஆவேசம்
ஆதாயம் இருக்குமென்றால் எல்லோரும் பிரபாகரன் படத்தை பயன்படுத்துங்கள். எல்லோரும் பிரபாகரன் படத்தை பயன்படுத்த வேண்டுமென்றே இவ்வளவு நாள் நான் போராடினேன்.
மயிலாடுதுறை இரட்டை கொலைக்கு முன் விரோதமே காரணம் என போலீசார் கூறுவது வேதனையளிக்கிறது. எப்படியாவது இந்த அரசை பாதுகாக்க வேண்டும் என நினைக்கிறார்கள்." எனத் தெரிவித்துள்ளார்.