Tuesday, Jun 24, 2025

கில்லியில் பிரகாஷ்ராஜ் சொல்லும் அந்த வார்த்தை என்னுடைய பிட்டுதான் - சீமான் பேச்சு!

Prakash Raj Tamil Cinema Seeman Vadivelu
By Jiyath 2 years ago
Report

செல்லம் என்ற வார்த்தையை சினிமாவில் முதன் முதலில் நான்தான் சொன்னேன் என்று சீமான் பேசியுள்ளார்.

பொதுக்கூட்டம்

கோவை மாவட்டம், சித்தாப்புதூரில் "ஏன் வேண்டும் நாம் தமிழர் கட்சி" என்ற தலைப்பில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார்.

கில்லியில் பிரகாஷ்ராஜ் சொல்லும் அந்த வார்த்தை என்னுடைய பிட்டுதான் - சீமான் பேச்சு! | Seeman Claims For Gilli Movie Dialogue Chellam I

அப்போது அவர் பேசியதாவது "ராத்திரியில் நான் தொலைப்பேசியில் "சொல்லுடி செல்லக்குட்டி, அப்படி இல்லடி செல்லம்" என்று பேசிக்கொண்டிருந்தேன். இதை என் மாமியார் கேட்டுவிட்டு, ராத்திரியில் யாருடன் செல்லக்குட்டி என்று பேசிக்கொண்டிருக்கிறார் என்று யோசித்திருக்கிறார்.

பின்னர் காலையில் என் மனைவியிடம் "உன் கணவர் ஏதோ ஒரு பெண்ணிடம் செல்லக்ககுட்டி, செல்லக்குட்டினு பேசிக்கொண்டிருக்கிறார் என்று சொல்லியிருக்கிறார்.

சீமான் பேச்சு

அதற்கு என் மனைவி மாமியாரிடம் "ஏமா நடிகர் வடிவேலு அண்ணனிடம் தான் அப்படி பேசியிருப்பார், அவர்கள் இருவரும் அப்படித்தான் பேசிக்கொள்வார்கள் என்று கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து சீமான் பேசுகையில் "முதன் முதலில் 'செல்லம்' என்று சினிமாவில் நான்தான் சொன்னேன்.

கில்லியில் பிரகாஷ்ராஜ் சொல்லும் அந்த வார்த்தை என்னுடைய பிட்டுதான் - சீமான் பேச்சு! | Seeman Claims For Gilli Movie Dialogue Chellam I

பாஞ்சாலங்குறிச்சி படம் இயக்கும்போது வடிவேலுவைப் பார்த்து 'செல்லம் இங்க வாடி, இங்க வந்து நில்லுடி" என்று போடி, வாடி என்றுதான் பேசிக்கொள்வோம். இந்த வார்த்தை அப்படியே பரவி, அதை அப்படியே `கில்லி' படத்தில் பிரகாஷ் ராஜ் நடிகையை பார்த்து ‘செல்லம்’ என்று எடுத்து வைத்துவிட்டார். அந்த பிட்டு என்னுடைய பிட்டுதான் என்று சீமான் பேசியுள்ளார்.