என்ன விட பாஜகவால் ஒரு ஓட்டு அதிகமாக வாங்க முடியுமா?....அண்ணாமலைக்கு சவால் விட்ட சீமான்
மோடி எதிர்த்து போட்டியிடுவேன் என நாம் தமிழர் கட்சி சீமான் கூறிய நிலையில், தற்போது அண்ணாமலைக்கும் சீமானுக்கும் வாரத்தை மோதல் அதிகரித்துள்ளது.
சீமான் சவால்
வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக தேசிய கட்சிகள் மும்முரமாக தயாராகி வருகின்றன. முக்கியமாக பாஜக கட்சி வரும் தேர்தலில் எப்படியேனும் வென்றிட வேண்டும் என பல முன்னெடுப்புகளை எடுத்து வருகின்றது. இந்த தேர்தலில் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தின் ராமநாதபுர தொகுதியில் போட்டியிடுவார் என கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் அண்மையில் கட்சி உறுப்பினர் திருமண விழாவில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இது குறித்து பேசும் போது, தமிழகத்தில் மோடி எங்கு போட்டியிட்டாலும் தான் நிச்சயமாக அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என அதிரடியாக கருத்து தெரிவித்திருந்தார்.
அண்ணாமலை பதிலடி
இந்நிலையில், இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த போது பேசிய அவர், தனக்கு சீமான் மீது நல்ல மதிப்பிருக்கிறது என குறிப்பிட்ட அவர், ஆனால் சீமான் சில விஷயங்களை புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
சீமான் எங்கு போட்டியிட்டாலும் தோற்கத்தான் போகிறார் என கூறி, எங்கு வேண்டுமானாலும் போட்டியிடுவேன் என கூறும் சீமான், வாரணாசியிலோ அல்லது வதோத்தராவிலோ போய் போட்டியிடலாமே பதிலடி கொடுத்துள்ளார்.
சீமான் பதிலடி
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், நான் எங்கு போட்டியிட்டாலும் தோல்வி அடைந்து விடுவேன் சரி தான் என்றாலும் பாஜக ஜெயித்து விடுமா? என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தின் தான் 40 தொகுதிகளிலும் வேட்பாளரை நிறுத்த தயார் என கூறிய அவர், தங்களை எதிர்த்து போட்டியிட்டு ஒரே வாக்கோ அல்லது ஒரு வாக்கு சதவீதமோ பாஜாகவால் வாங்கமுடியுமா? என அதிரடியாக சவால் விட்டுள்ளார்.