அண்ணாமலையின் 2-ம் கட்ட யாத்திரை 4-ஆம் தேதி துவங்கும்...பாஜக
அண்ணாமலையின் பாதயாத்திரையின் இரண்டாம் கட்டம் வரும் 4-ஆம் தேதி துவங்கும் என பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
தமிழக பாஜகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் அக்கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை நடைபெற்றது. இது பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. சிலிண்டரின் விலையை ரக்ஷா பந்தனை முன்னிட்டு 200 ரூபாய்க்கு குறைத்துள்ளதற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலை முன்னிட்டு இல்லாமல், மக்களின் தேவையை அறிந்து செயல்படத்திற்கு பிரதம ருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ள அதே நேரத்தில், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும் சந்திராயன் 3 விண்கலத்தின் வெற்றிக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணாமலையின் பாதயாத்திரை
அதே போல இந்த கூட்டத்தில் வரும் 4-ஆம் தேதி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது பாதயாத்திரையின் அடுத்த கட்டத்தை தென்காசியில் துவங்குவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 28-ஆம் தேதி ராமேஸ்வரத்தில் துவங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த 2-ஆம் கட்ட பாதயாத்திரையை அண்ணாமலை தென்காசியில் இருந்து 29-ஆம் தேதி கோவை சிங்கநல்லூரில் முடிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Technology: 3600 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை தாங்கும் பொருளா? உலகையே மிரளவைத்த சீனாவின் கண்டுபிடிப்பு! Manithan
