சுட்டுரையை முடக்கிவிட்டால் சீமான் தீர்ந்து போவாரா? - கொந்தளித்த கவிஞர் வைரமுத்து

Seeman Vairamuthu
By Irumporai Jun 01, 2023 09:10 AM GMT
Report

சீமானின் ட்விட்டர் பக்கத்தை முடக்கியதற்கு கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார்.

சீமான் ட்விட்டர் பக்கம் முடக்கம் 

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு தற்போது முடக்கப்பட்டுள்ளது , அவரது பக்கத்தில் சட்டப்பூர்வ கோரிக்கையை ஏற்று சீமானின் அதிகாரப்பூர்வ கணக்கு இந்தியாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என ட்விட்டர் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

சுட்டுரையை முடக்கிவிட்டால் சீமான் தீர்ந்து போவாரா? - கொந்தளித்த கவிஞர் வைரமுத்து | Seaman Run Out If Chatter Is Vairamuthu

 இதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்த நிலையில் கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பதிவில் :

வைரமுத்து கேள்வி

வன்மையாகக் கண்டிக்கிறேன் சுட்டுரையை முடக்கிவிட்டால் சீமான் தீர்ந்து போவாரா? வெயிலுக்கு எதிராகக் குடைபிடித்தால் காணாமற் போகுமோ கதிரவன்? கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளுங்கள்.

கை கால்களைக் கட்டாதீர்கள் கருத்துரிமை இன்னும் உயிரோடு இருப்பதாக நம்புகிறவர்களுள் நானும் ஒருவன் என பதிவிட்டுள்ளார்