ஆபத்தான இயக்கம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா - தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு..!

Tamil nadu R. N. Ravi
By Thahir May 06, 2022 06:47 AM GMT
Report

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆபாத்தான அமைப்பு என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஒரு பயங்கரவாத அமைப்பு என கடுமையாக சாடினார்.

இது குறித்து அவர் பேசுகையில், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆபாத்தான அமைப்பு , மனித உரிமை அமைப்பு,மாணவர்கள் அமைப்பு , என்ற முகமூடிகளை பயன்படுத்துகிறது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா.

பயங்கரவாத இயக்கங்களுக்கு பின்புலமாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா செயல்படுவதாக ஆளுநர் விமர்சித்துள்ளார். அரசியல் லாபத்திற்காக வன்முறையை துாண்டுபவர்கள் அனைவரும் பயங்கரவாதிகளே எனவும் அவர் தெரிவித்துள்ளார். நாட்டை சீர்குலைப்பதே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நோக்கம் என தெரிவித்துள்ளார்.