எதிர்காலத்தில் கொரோனாவை விட கொடிய வைரஸ் தாக்கும் - எச்சரிக்கும் சீன வைராலஜிஸ்ட்!
கொரோனாவை விட கொடிய வைரஸ்கள் விரைவில் உலகை தாக்க வாய்ப்பிருப்பதாக சீன வைராலஜிஸ்ட் ஷி ஜெங்லி எச்சரித்துள்ளார்.
ஆய்வு
கொரோனா பெருந்தொற்றின் தாக்கத்தில் இருந்து இப்போதுதான் உலக நாடுகள் படிப்படியாக மீண்டு வருகிறது. இந்நிலையில் சீனாவில், வைரஸ்கள் குறித்து ஆய்வில் மிகவும் பிரபலமாக அறியப்படும் ஷி ஜெங்லி (Shi Zhengli) என்பவர் எதிர்காலத்தில் மற்றொரு கொரோனா வைரஸ் பாதிப்பு வருவதற்கான ஆபத்துகள் உள்ளதாக எச்சரித்துள்ளார்.
ஷி ஜெங்லி விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் நோய்கள் குறித்தும், வௌவால்களிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவும் நோய்களைக் குறித்தும் ஆய்வு செய்து வருகிறார்.
இவர் அண்மையில் தனது சக ஊழியர்களுடன் இனைந்து 40 வகையான வெவ்வேறு கொரோனா வைரங்கள் மனிதர்களில் பரவுவதற்கான அபாயத்தைக் குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இந்த 40 வகையான வைரஸ்களில் பாதி 'மிகவும் ஆபத்தானவை' (highly risky) என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
எதிர்காலத்தில் வைரஸ் பாதிப்பு
இதில் 6 வைரஸ்கள் ஏற்கனவே மனிதர்களை பாதித்துள்ளது. அதில் 3 வகையான கொரோனா வைரஸ்கள் விலங்குளை பாதித்துள்ளது. இந்நிலையில் மற்றொரு கொரோனா வைரஸ் தொடர்பான பாதிப்பு எதிர்காலத்தில் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாக, இவரின் ஆராய்ச்சியின் முடிவுகள் தெரிவித்துள்ளன.
இது குறித்து ஷி ஜெங்லி எச்சரிக்கையில் 'முன்பு ஒரு கொரோனா வைரஸ் பாதிப்பு தோன்றினால், அது எதிர்காலத்திலும் உண்டாவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய தொற்றுநோய்களை எதிர்கொள்ளும் வகையில் சுகாதார உள்கட்டமைப்புகள் உலகளாவிய நிலையில் தயாராக இருக்க வேண்டும்'' என்று எச்சரித்துள்ளார். இந்த ஆய்வு குறித்தான எச்சரிக்கை மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.