ஜூன் 14 முதல் ஆசிரியர்கள், பணியாளர்கள் பள்ளிக்கு வர உத்தரவு!

teacher order tn govt arrive school
By Anupriyamkumaresan Jun 09, 2021 03:33 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in கல்வி
Report

தமிழகத்தில் வரும் ஜூன் 14-ம் தேதி முதல் அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், பணியாளர்கள் பள்ளிக்கு வருகை புரிய கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாணவர்களுக்கு 2021 – 2022 கல்வியாண்டுக்கான பாட தொடக்கம் நடைபெறவுள்ள நிலையில் ஜூன் 14-ம் தேதி முதல் அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், பணியாளர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

ஜூன் 14 முதல் ஆசிரியர்கள், பணியாளர்கள் பள்ளிக்கு வர உத்தரவு! | School Teachers Come To School Order Tn Govt

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் அனைவரும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஜூன் 14 முதல் பணிக்கு வருகை புரிய வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜூன் 14 முதல் ஆசிரியர்கள், பணியாளர்கள் பள்ளிக்கு வர உத்தரவு! | School Teachers Come To School Order Tn Govt