'என்னை காதலிங்க' - 3 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி ஆசிரியர்!

Tamil nadu Sexual harassment Salem
By Jiyath Nov 01, 2023 05:55 AM GMT
Report

3 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அரசு பள்ளி ஆசிரியர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாலியல் தொந்தரவு

சேலம் மாவட்டத்தில் நடுப்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செய்யப்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 1000க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். அங்கு ராஜமாணிக்கம் என்பவர் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

அவர் 3 மாணவிகளுக்குத் தனியாக டியூஷன் எடுப்பதாகக் கூறி டியூஷன் அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. மேலும், தன்னை காதலிக்குமாறும், திருமணம் செய்து கொள்கிறேன் எனவும் ஆசை வார்த்தை கூறி தனித்தனியாக மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து பெற்றோர்களிடம் மாணவிகள் கூறியுள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு, அந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்குமாறு போராட்டம் நடத்தினர்.

ஆசிரியர் கைது

மேலும், சிறுவர் உதவி மையத்திலும் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் பள்ளிக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில் ஆசிரியர் பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.

மாணவிகளிடம் ஆசிரியர் செல்போனில் பேசியதையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். மேலும், மாணவிகள் புகார் அளித்ததை அடுத்து "இனிமேல் தவறு செய்ய மாட்டேன், என்னை மன்னித்து விடுங்கள்.

புகார் கொடுக்க வேண்டாம்” என ஆசிரியர் கதறும் ஆடியோக்களையும் போலீசார் ஆதாரமாக கைப்பற்றினர். இதனையடுத்து ஆசிரியர் ராஜமாணிக்கத்தை போக்சோ வழக்கில் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். இந்த சமத்துவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.