11-ம் வகுப்பு மாணவனுக்கும் ஆசிரியைக்கும் மலர்ந்த தெய்வீக காதல் - தலைமறைவான ஜோடி..!
பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவருடன் 26 வயது ஆசிரியைக்கு ஏற்பட்ட காதலால் மாணவனை இழுத்து கொண்டு ஓடிய ஆசிரியை போலீசார் தேடி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே செயல்பட்டு வரும் பள்ளியில் 11-ம் வகுப்பு வகுப்பு படித்து வருகிறார் 17 வயது மாணவர் ஒருவர்.
அதே பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் 26 வயது பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பழக்கம் நாளடைவில் தெய்வீக காதலாக மாறியுள்ளது.
இந்த நிலையில் 26 வயது ஆசிரியை மாணவனை இழுத்துக் கொண்டு தலைமறைவானார். இதையடுத்து மாணவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார்,தலைமறைவான காதல் ஜோடிகளை வலை வீசி தேடி வருகின்றனர். மேலும் மாணவர் 18 வயதை அடையாததால் ஆசிரியை மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளதாக காவல்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
11-ம் வகுப்பு மாணவனை பள்ளி ஆசிரியை இழுத்துக் கொண்டு ஓடிய சம்பவம்
மணப்பாறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.