பள்ளியில் வைத்தே வீடியோவில் சிக்கிய ஆசிரியை - ஆத்திரத்தில் செய்த காரியம்!

Viral Video Uttar Pradesh India
By Jiyath Apr 20, 2024 10:13 AM GMT
Report

தன் முக அழகைப் பாதுகாக்க பள்ளியில் வைத்தே ஃபேஷியல் செய்த தலைமை ஆசிரியை ஒருவரின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைமை ஆசிரியை 

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் தண்டமாவ் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள ஒரு ஆரம்பப் பள்ளியில் சங்கீதா சிங் என்பவர் தலைமை ஆசிரியராக உள்ளார். இவர் மேக்கப், ஹேர்ஸ்டைல் போன்றவற்றால் தன் முக அழகை பாதுகாப்பதில் அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளார்.

பள்ளியில் வைத்தே வீடியோவில் சிக்கிய ஆசிரியை - ஆத்திரத்தில் செய்த காரியம்! | School Headmaster Beautician Video Uttar Pradesh

சங்கீதா மேக்கப் மீது கவனம் செலுத்துவதால் வகுப்புக்கு சென்று மாணவர்களுக்கு பாடம் கூட நடத்தாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு அதே பள்ளியில் பணிபுரியும் அனம் கான் என்ற ஆசிரியை முடிவு கட்ட நினைத்துள்ளார். சம்பவத்தன்று சங்கீதா சிங் ஒரு பியூட்டிஷியனை தன்னுடனேயே அழைத்து வந்து பள்ளி சமையலறைக்குள் ஃபேஷியல் செய்துகொண்டு இருந்துள்ளார்.

கேரள ரயிலில் தமிழக மாடல் அழகி - வாலிபர் விடாமல் செய்த காரியம் - அதிர்ச்சி!

கேரள ரயிலில் தமிழக மாடல் அழகி - வாலிபர் விடாமல் செய்த காரியம் - அதிர்ச்சி!

விசாரணை 

அப்போது தனது செல்போனில் வீடியோ எடுத்தபடியே அனம் கான் சமையலறைக்குள் நுழைந்துள்ளார். அந்த வீடியோவில் சங்கீதாவின் முகம் தெளிவாக பதிவாகியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அவர் வீடியோ எடுத்துக் கொண்டிருந்த அனம் கானின் மீது பாய்ந்து கை மற்றும் உடம்பெல்லாம் கண்டபடி கடித்துள்ளார்.

பள்ளியில் வைத்தே வீடியோவில் சிக்கிய ஆசிரியை - ஆத்திரத்தில் செய்த காரியம்! | School Headmaster Beautician Video Uttar Pradesh

உடனே அனம்கான் உடம்பெல்லாம் காயத்துடன் காவல் நிலையத்துக்கு சென்று வீடியோவை சமர்ப்பித்து சங்கீதா மீது புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக தலைமை ஆசிரியை சங்கீதாவிடம் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.