பெண் போலீஸ் செய்த காரியம்; கல்வித்துறை அதிகாரி வாகனத்தை துவம்சம் செய்த பள்ளி மாணவிகள்!
கல்வித்துறை அதிகாரியின் வாகனத்தை மாணவிகள் அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாணவிகள் போராட்டம்
பீகார் மாநிலம் பாட்னாவை அடுத்த வைஷாலி மாவட்டத்தில் உள்ள மனார் பிளாக்-இல் அரசு பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லாததை கண்டித்து பள்ளி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதன் சவுக் மற்றும் படேல் சவுக் அருகில் உள்ள மனார் மௌதிநகர் பிரதான சாலையை மறித்து மாணவிகள் போராட்டம் நடத்தினர். இதில், பல முறை கோரிக்கை விடுத்தும், அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என்று மாணவிகள் குற்றம் சாட்டினார்.
போராட்டத்தின் போது அங்கு வந்த கல்வித்துறை அதிகாரிகளின் வாகனத்தை பள்ளி மாணவிகள் அடித்து நொறுக்கினர்.
உடைக்கப்பட்ட வாகனம்
இதுகுறித்து மாணவிகள் கூறுகையில் "போராட்டத்தில் ஈடுபட்ட போது பெண் காவல் துறை அதிகாரி ஒருவர் தங்களை அடித்த காரணத்தால் தான் கல்வித்துறை அதிகாரியின் வாகனத்தை அடித்து நொறுக்கியதாக மாணவிகள் தெரிவித்துள்ளனர். இந்த சமத்துவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

300 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் திரிகிரஹி யோகம்.. இனி பண மழை கொட்டுமாம்..அதிர்ஷ்டம் யாருக்கு? Manithan
