பள்ளி மாணவிகளுக்கு கருத்தடை சாதனம் - பூதாகரமான விவகாரம்!
4,500 பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு கருத்தடை சாதனங்கள் பொருத்தப்பட்ட சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மக்கள் தொகை
1953 இல் கிரீன்லாந்து டென்மார்க்கின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறியது.பின்னர் டென்மார்க் உள்கட்டமைப்பு மற்றும் சமூக சேவைகளின் நவீனமயமாக்கலில் அதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கியது. டென்மார்க் தொழிலாளர்கள் மக்கள் தொகை குறைவாக உள்ள பகுதிக்கு குடிபெயர்ந்தனர்.

கடந்த சில ஆண்டுகளுக்குள், கிரீன்லாந்தில் பிறப்பு விகிதம் மிக அதிகமாக இருந்தது. அங்குள்ள 16 வயதுக்குட்பட்ட மக்கள்தொகையில் பாதி பேருக்கு, திருமணத்திற்கு முன் பிறந்த குழந்தைகள் எண்ணிக்கை 25% என்ற தரவுகளுடன் உலகிலேயே அதிக பிறப்பு விகிதங்களில் ஒன்றாக இருந்தது.
கருத்தடை சாதனங்கள்
டென்மார்க் மருத்துவர்கள் கிரீன்லாந்தின் இன்யூட் குழுவைச் சேர்ந்த பெண்களுக்கு ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், பூர்வ குடி மக்களுக்கு குழந்தை பிறப்பதைத் தடுப்பதற்கும் கருத்தடை சாதனங்களை (IUS) பொருத்தினர்.
இதற்கு சில பெண்கள் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. கடந்த வாரம், டென்மார்க் சுகாதார அமைச்சர் மேக்னஸ் ஹூனிக் இந்த ஊழல் குறித்து விசாரிக்கப்படும் என்று அறிவித்தார். பாதிக்கப்பட்ட பெண்கள் சிலரை சந்தித்துப் பேசியுள்ளேன்.
ஆணாதிக்க உணர்வு?
உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அவர் அனுபவித்த வலியை இன்றும் உணர முடிந்தது என்றார். மேலும், கருத்தடை சாதனங்களை பொருத்துவதற்கான பிரச்சாரம் இரகசியமாக மேற்கொள்ளப்படவில்லை. ஆனால் இது பற்றி பெண்கள் பேசுவதற்கு பல தசாப்தங்கள் ஆனது.
ஆனால், தற்போது இந்த விவகாரம் அரசியல் ரீதியான விவகாரமாக வெடித்துள்ளது. 4,500 பெண்கள் மற்றும் பெண்களுக்கு கருத்தடை சாதனமாக IUD பொருத்தப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இதன் பின்னணியில் உள்ள ஆணாதிக்க, இனவாத உணர்வு பற்றி மக்கள் கடுமையாக விவாதித்து வருகின்றனர்.
இருப்பினும், குடும்பக் கட்டுப்பாடு இதழின் 1972 இதழில் இது ஒரு பெரிய 'வெற்றி' என்று பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிடம் அடிபணிந்தது அனுர அரசு : தேசிய பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தல் என விமல் கொந்தளிப்பு IBC Tamil
அமெரிக்க ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான் : மேலும் இரண்டு விமானங்கள் விரட்டியடிப்பு IBC Tamil