வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல் - தமிழகத்தில் பள்ளி இறுதி தேர்வை முன் கூட்டியே நடத்தும் அரசு
இந்தியா முழுவதும் இன்புளுயன்சா வைரஸ் காய்ச்சல் தீவிரமாக பரவி வரும் நிலையில் தமிழகத்தில் 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதி தேர்வை முன் கூட்டியே நடத்த அரசு திட்டமிட்டுள்ளது.
தேர்வை முன் கூட்டி நடத்த அரசு திட்டம்
வைரஸ் காய்ச்சல் பரவல், கோடை வெளியில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளிட்ட காரணங்களால் பள்ளி இறுதி தேர்வுகளை முன்னதாக நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏப்ரல் 30-ம் தேதி தேர்வுகளை முடிக்க திட்டமிருந்த நிலையில், ஏப்ரல் 24ம் தேதிக்குள் தேர்வுகளை முடித்து விடுமுறை வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக புதுச்சேரியில் 16 ஆம் தேதி முதல் வருகிற 26 ஆம் தேதி வரை 1 முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ,மாணவிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.