கன்னியாகுமரியில் நாளை உள்ளூர் விடுமுறை ; பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

kaniyakumarilocalholiday mahashivarathrischoolsshut schoolcollegeholiday1stmarch
By Swetha Subash Feb 28, 2022 10:12 AM GMT
Report

இந்து மக்களால் ஆண்டுக்கு ஒரு முறை வெகு விமர்சையாக கொண்டாடப்படும் விழா மகா சிவராத்திரி. ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரக்கூடிய தேய்பிறை சதுர்த்தி திதியில் தான் சிவராத்திரி வரும்.

அந்த வகையில் 2022 மார்ச் 1-ம் தேதியான நாளை மகா சிவராத்திரி சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.

இதற்காக தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு சிவன் கோயில்களிலும் மகா சிவராத்திரியை ஒட்டி முன்னேற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

கன்னியாகுமரியில் நாளை உள்ளூர் விடுமுறை ; பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு | School Colleges To Be Shut Due To Maha Shivarathri

அந்த வகையில், மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரியில் சிவாலய ஓட்டம் நடைபெறும். இதில் கலந்துக்கொள்ள தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சிவ பக்தர்கள் தரிசனம் செய்வார்கள்.

இதன் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை அளிப்பட்டுள்ளது.

ஆகையால் நாளை கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகள் போன்ற கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறைக்கு பதில் மார்ச் 12-ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.