தொடரும் கனமழை: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
Tamil nadu
Chennai
Tiruchirappalli
By Thahir
தமிழகத்தின் பல பகுதிகளில் இன்றும் மழை தொடர்ந்து வரும் நிலையில், நாளையும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கி, வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழகத்தில் சில பகுதிகளில் கனமழையும் , சில இடங்களில் மிதமான மழையும் தொடர்ந்து பெய்து வருகிறது.
இதையடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுவரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், கடலூர்,விழுப்புரம், செங்கல்பட்டு, நீலகிரி, திருச்சி, மயிலாடுதுறை, திருவாரூர், அரியலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.