பள்ளி பேருந்து மோதி கோர விபத்து - 9 பேர் பரிதாப பலி!

Kerala Accident Death
By Sumathi Oct 06, 2022 06:17 AM GMT
Report

 பள்ளி வாகனம் கேரள அரசுப் பேருந்தில் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

கோர விபத்து

கேரளா, பாலக்காடு, எர்ணாகுளம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள் ஊட்டிக்கு சுற்றுலா சென்று கொண்டிருந்தனர். இந்த சுற்றுலா பேருந்தில் 43 மாணவர்கள், 5 ஆசிரியர்கள் உள்ளிட்ட 51 பேர் இருந்தனர்.

பள்ளி பேருந்து மோதி கோர விபத்து - 9 பேர் பரிதாப பலி! | School Bus Kerala Govt Bus Collision Accident

அப்போது பாலக்காடு-வடகஞ்சேரி தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்ற சுற்றுலா பேருந்தானது முன்னால் சென்று கொண்டிருந்த கேரள அரசு பேருந்து மீது மோதி பயங்கரமாக விபத்துக்குள்ளானது.

 9 பேர் பலி

மோதிய வேகத்தில் பள்ளி வாகனம் சாலையில் தலைகீழாக கவிழ்ந்தது. இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயணைப்பு படையினர் மற்றும் மீட்புக்குழுவினர் மீட்புப்பணியில் ஈடுபட்டு வந்தனர்.

பள்ளி பேருந்து மோதி கோர விபத்து - 9 பேர் பரிதாப பலி! | School Bus Kerala Govt Bus Collision Accident

ஆனால் சுற்றுலா பேருந்தில் இருந்த 5 மாணவர்கள் உள்ளிட்ட 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 41 பேர் படுகாயமடைந்தனர். விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்புக்குழுவினர் மீட்டு அருகில் இருந்த மருத்துமனையில் சிகிச்சைக்கான அனுமதித்தனர்.

இதில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.