ஜி 20 மாநாடு..2ஆம் நாள் முக்கிய நிகழ்வுகள்...பிரதமர் மோடியின் Schedule என்ன..?
இந்திய தலைநகர் டெல்லியில் ஜி 20 உச்சி மாநாடு நடைபெற்று வரும் நிலையில், இன்று தினம் நடைபெறும் நிகழ்வுகள் குறித்து செய்திகள் வெளிவந்துள்ளன.
ஜி 20 உச்சி மாநாடு
19 நாடுகள் மற்றும் ஐரோப்பா ஒன்றியத்தை உள்ளடக்கிய ஜி20 உச்சி மாநாடு டெல்லியில் நடைபெற்று வருகிறது. கடந்து ஆண்டு டிசம்பர் முதல் இந்திய இந்த கூட்டமைப்பிற்கு தலைமை வகிக்கிறது.
டெல்லியில் நடைபெறும் இந்த மாநாட்டிற்கு இந்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்று வருகின்றது. நேற்று துவங்கிய இந்த மாநாட்டில் பல்வேறு தர்பூ முடிவுகள் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
2-ஆம் நாள் Schedule
இன்று மாநாட்டின் இரண்டாம் நாள் கூட்டம் நடைபெறுகிறது. இன்று காலை 8.15 மணிக்கு துவங்கி தூதுக்குழுக்களில் உள்ள பல நாட்டு தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் தனிப்பட்ட வாகன அணிவகுப்புகளில் ராஜ்காட் வந்தடைந்தனர். பிறகு, மகாத்மா காந்தியின் சமாதியில் தலைவர்கள் காலை 9:20 மணி வரை மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
அதனை தொடர்ந்து, பாரத் மண்டபத்தின் தலைவர்கள் ஓய்வறைக்கு சென்ற நிலையில் அவர்களுக்கு அங்கே காலை உணவு பரிமாறப்பட்டது. காலை 10.15 மணிக்குள் தலைவர்கள் மற்றும் தூதுக்குழு தலைவர்கள் பாரத மண்டபத்திற்கு வருகின்றனர். பிரதமரின் Schedule பின்னர் அதனை தொடர்ந்து பாரத் மண்டபத்தின் தெற்கு பிளாசாவில் மரம் நடும் விழா நடைபெற்ற பிறகு, மதியம் 12:30 மணி வரை உச்சிமாநாட்டின் மூன்றாவது அமர்வு, 'ஒரு எதிர்காலம்' என்ற பெயரில் நடத்தப்படவுள்ளது.
இந்த அமர்விற்கு பிறகு இந்திய பிரதமர் நரேந்திர மோடி மதிய உணவு வேளையில் பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் இம்மானுயேல் மேக்ரானை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துகிறார். அதனை தொடர்ந்து, கோமோரோஸ், துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம், தென் கொரியா, ஐரோப்பிய யூனியன், பிரேசில் மற்றும் நைஜீரியா நாட்டு தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.