செந்தில் பாலாஜி வழக்கு - அமலாக்கத்துறைக்கு கெடு வைத்த உச்சநீதிமன்றம்
அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரணையை செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் முடித்திட வேண்டுமென உச்சநீதிமன்றம் அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
செந்தில் பாலாஜி வழக்கு
2015-ஆம் ஆண்டு சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி சில மாதங்கள் முன்பு அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அதனை எதிர்த்து செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் நேற்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
செந்தில் பாலாஜியின் கைது செல்லும் என தீர்ப்பளித்து அவரை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரத்தை வழங்கியது உச்சநீதிமன்றம்.
கெடு வைத்த உச்சநீதிமன்றம்
நேற்று, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜியை கஸ்டடியில் எடுத்த அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் தற்போது கெடு வைத்துள்ளது.
அதில், வரும் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியிடம் தனது விசாரணையை முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில் தமிழ்நாடு குற்றப்பிரிவு காவல்துறை முன்வைத்த 6 மாத அவகாசத்தையும் உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.