தப்பித்த ரவீந்திரநாத்தின் எம்.பி பதவி - உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
தேர்தல் முடிவு செல்லாது என சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாடிய ரவீந்திரநாத்தின் எம்.பி பதவி தப்பித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி
2019-ஆம் தேனீ தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்'ஸின் மகன் ரவீந்திரநாத் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வானார். அதிமுகவில் இருந்து நாடாளுமன்றம் சென்ற ஒரே வேட்பாளரான அவரின் தேர்தல் வெற்றியை தள்ளுபடி செய்யவேண்டுமென மிலானி என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அவரது வெற்றி செல்லாது என பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
மேல்முறையீடு
இதனை எதிர்த்து ரவீந்திரநாத் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.இந்த வழக்கின் விசாரணை சூர்யா காந்த் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அவர், ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என்ற உயர்நீதிமன்ற உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிடப்பட்டது.
மேலும் இது வழக்கு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய கோரி மனுதாரர் மிலானி மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.